10 000 அடி உயரத்தில் இருந்து விழுந்த சிறுமிக்கு என்ன ஆச்சு தெரியுமா?


பொதுவாகவே
விமானவிபத்துக்கள் நடைபெற்றால் அதில் பயணம் செய்யும் அனைவருமே இறந்துவிடுவார்கள் மிக மிக அரிதாகத்தான் அதில் பயணம் செய்யும் சிலர் உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அப்படி உயிர்தப்பினாலும் கை கால்களை இழந்தோ அல்லது நிரந்தர பாதிப்புக்களுடனேதான் நாம் உயிர்வாழமுடியும் ஆனால் நாம் இப்போது ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம்



1971 டிசம்பரில் ஜூலியான கோபிக் என்ற 17 வயதுச்சிறுமி தனது ஹை ஸ்கூல் பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் தாயுடன் சேர்ந்து புல்காப்பா என்ற இடத்தில் இருந்து லீமா என்ற இடத்திற்கு விமானத்தின் மூலம் புறப்படுகின்றார்கள் பட்டமளிப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் லஸ்னா 508 என்ற தனியார் விமானத்தின் மூலம் இவர்கள் புறப்படுகின்றார்கள் லீமா என்ற இடத்தில் இருக்கும் தன் தந்தையுடன் பட்டமளிப்புவிழாவைக்கொண்டாடுவதற்காகவே அவர்கள் விரைவாக தமது பிரயாணத்தை ஆரம்பித்திருந்தார்கள்

இரண்டு நகரங்களுக்குமிடையில் ஒரு மணி நேர பிரயாண இடைவெளிதான் இருந்தது அவர்கள் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது வானிலை திடீர் என மோசமடைகின்றது எங்கும் கும்மிருட்டு மழையுடன் மின்னலடிக்க ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் பயணிகள் பயத்தில் அலறினாலும் கேப்டன் அவர்களை சமாதானப்படுத்துகின்றார் ஆனால் திடீர் என ஒரு பெரிய மின்னல் விமானத்தின் இறக்கையை தாக்கிவிட விமானம் இருளில் மூழ்கிவிடுகின்றது எல்லாம் முடிந்துவிட்டது என ஜூலியானாவின் அம்மா கூறிவிட விமானத்தின் எஞ்சினும் செயலிழந்துவிடுகின்றது கட்டுப்பாட்டை இழந்தவிமானம் கீழே விழ ஆரம்பிக்கின்றது உள்ளேயிருந்த பிரயாணிகள் அலற ஆரம்பிக்கின்றார்கள் சடுதியாக விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துவிட ஜூலியானவின் தாயார்  ஜூலியானாவின் கண்முன்னாலேயே வெளியே தூக்கிவீசப்படுகின்றார்



கண்ணிமைக்கும் நேரத்தில் அவரும் தூக்கிவீசப்படுகின்றார் ஆனால் அவர் சீட் பெல்ட்டினால் சீட்டில் இணைக்கப்பட்டிருந்தார் 3 நபர்கள் அடுத்தடுத்து அமரக்கூடிய அந்த சீட் அவருடன் சேர்த்து வெளியில் வீசப்பட்டிருந்தது விபத்து நடந்தபகுதிக்கு கீழேதான் மிக அடர்த்தியான அமேசான் காடு அமைந்திருந்தது வெளியே தூக்கிவீசப்பட்ட ஜூலியானா கீழே விழ ஆரம்பித்தார் ஆனால் ஹெலிஹாப்டரின் இறக்கை சுற்றுவதைப்போல் அவரது சீட் மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது ஜீலியானாவிற்கு உலகமே மிகவேகமாக சுற்ற ஆரம்பித்திருந்தது அந்தவேகத்தில் சீட் சுழன்றுகொண்டு கீழே விழ ஆரம்பிக்க்க ஜூலியானா மயங்கிவிடுகின்றார்

காட்டுக்குள் விழுந்த ஜூலியானா சுமார் 20 மணித்தியாலங்கள்வரை மயக்கன்  நிலையிலேயே இருந்திருக்கிறார் விழித்ததும் சீட்பெல்டில் இருந்து தன்னைவிடுவித்துக்கொள்கின்றார் அப்போதுதான்  நடந்த கொடூர சம்பவம் கனவல்ல என்பதும் நடுக்காட்டிற்குள் தான் தனி ஆளாக தப்பியிருப்பதையும் அவர் உணர்ந்துகொள்கின்றார் அதிஷ்டவசமாக அவரது கடிகாரம் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்தது அப்போது நேரம் அதிகாலை 9 மணி மழைபெய்துகொண்டிருந்தது



உடல்முழுவதும் வலி அவரால் நடக்கவேமுடியவில்லை அதோடு மழையில் நன்றாக நனைந்துமிருந்தார் இதனால் வேறுவழியில்லாமல் ஒரு சீட்டின் கீழே சுருண்டு படுத்துக்கொண்டார் ஜூலியானா சிறிது நேரத்தில் என் உடலில்  எந்த உணர்ச்சியையும் உணரமுடியவில்லை என்று கூறுகிறார் ஜூலியானா அதன்பின்னர் மீண்டும் மயங்கிவிடுகிறார்  நாள் முழுவதும் மயக்கத்திலேயே சீட்டின் அடியில் கழிந்துவிடுகின்றது

எழுந்து நடக்கவே ஒரு நாள் ஆகின்றது எழுந்து நடக்கும்போதுதான் தனது தோள்மூட்டு உடைந்திருப்பட்தையும் தொடையில் பெரிய வெட்டுக்காயம் இருப்பதையும் தெரிந்துகொள்கின்றார் ஜூலியானா ஆனால் அதிஷ்டவசமாக இரத்தம் அதிகம் வெளியேறவில்லை அதோடு உடைந்த தோள்மூட்டு எலும்பு தோலைக்கிழிக்கவில்லை

ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தில் புழுப்பிடித்துவிடுகின்றது இதனால் கையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றவேண்டியேற்பட்டுவிடுமோ என ஜூலியான பயப்படுகிறார் ஆனாலும் அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை

வைத்தியர்கள் பின்னர்தான் அவரது முதுகெலும்பிலும் உடைவுகள் இருந்திருப்பதாக கூறுகின்றார்கள் ஆபத்துவேளைகளில் உடலில் சுரக்கும் அட்ரினலின் ஹோமோன்காரணமாகத்தான் இவற்றின் வலியை உணராமல் தொடர்ந்தும் ஜூலியானா இயங்கியிருக்கின்றார்

நீண்டமுயற்சிக்குப்பின் வலியிலும் அவர் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கின்றார்  முதலைகள் பாம்புகள் விஷப்பூச்சிகள் நிறைந்திருக்கும் காடுதான் அமேசன் அதில் இருந்து தன்னந்தனியாகதப்பிவருதல் என்பது மிக்ச்சவாலான விடயம்தான்

அங்குதான் அவருக்கு அவரது தந்தைகற்றுக்கொடுத்தவிடயங்கள் நினைவுக்கு வருகின்றது அவரது தந்தை ஒரு சூலொஜிஸ்ட் தாவரங்கள் காடுகள் உயிரங்கள் பற்றிய புலமைகொண்டவர் அவர் அதோடு ஜூலியானாவின் சிறியவயதில் அவர்கள் வசித்த வீடும் இதே மாதிரியான காட்டுப்பகுதிக்குள்தான் அமைந்திருந்தது இவற்றினால் காட்டின் அசாதாரண சூழ்னிலைகளில் எப்படி உயிர்தப்புவது என்பதைப்பற்றிய பல விடயங்களை ஜூலியான சிறியவயதிலேயே அறிந்திருந்தார் இதுதான் அவர் உயிர்தப்புவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது

உடனடியாக வேறுயாராவது உயிருடன் இருக்கிறார்களா எனத்தேட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு கிடைத்தவையெல்லாம் பிணங்கள் மட்டுமே தன் தாயையும் தேட ஆரம்பிக்கின்றார் ஆனால் அவர்தொடர்பாக எந்த தடயமும் ஜூலியானாவிற்கு கிடைக்கவில்லை இதானால் உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு உடைகள் மருந்துகள் கிடைக்கின்றதா என உடைந்தவிமானத்திற்குள்ளே தேட ஆரம்பிக்கின்றார் ஜூலியானா

இப்படியே 4 நாட்கள் கழிந்துவிட வெளியே செல்லும்வழியைத்தேடி நடக்க ஆரம்பிக்கின்றார் ஜூலியானா திடீர் என பெரிய கழுகு ஒன்று கீழே வந்து அமர்ந்துவிடுகின்றது அப்போத்தான் அங்கே மேலும் சில பிணங்கள் இருப்பதை பார்க்கிறார் ஜூலியானா தன் தாயாக இருக்குமோ என்ற பயத்தில் ஓடிச்சென்று பார்த்தால் அது அவரது தாயாரல்ல இவ்வாறு திக்குத்தெரியாமல் நடந்து செல்லும் நாட்களில் மீட்பு விமானத்தின் சத்தத்தையும் ஜூலியானா கேட்கத்தவறவில்லை ஆனால் தான் கீழே இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவுமே இருக்கவில்லை அதோடு 20 30 அடி உயரத்திற்கு அடர்த்தியான மரங்கள் இருப்பதால் கீழே இருக்கும் ஜூலியானாவை விமானத்தில் இருப்பவர்களால் பார்க்கவும்முடியாது நாட்கள் செல்கின்றன உயிரோடு தப்பவேண்டுமென்றால் காட்டைவிட்டுத்தப்பி சென்றாகவேண்டும்





வேறு வழியே இல்லை உதவுவதற்கும் யாருமில்லை காட்டில் நீருக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை பெய்யும் மழை நீரை சேகரித்து அவரால் குடிக்கமுடிந்தது ஆனால் உணவை தேடுவது அவளவு இலகுவானதாக இருக்கவில்லை காட்டில் இருக்கும் கிழங்குகள் பழங்களை உண்னமுடியாது அவை விசமுள்ளவையாக இருந்தால் உடனடியாக மரணம்தான் ஆனால் அதிஷ்டவசமாக விமானத்தில் ஒரு சாக்லேட் பையொன்றை கண்டுபிடித்திருந்தார் அதற்குள்ளும் சில துண்டுகளே இருந்தன எனவே நாள் ஒன்றுக்கு இரண்டு துண்டுகளை தன் உணவுத்தேவைக்கு பயன்படுத்தவேண்டியேற்பட்டது ஆனாலும் அவை முடிந்ததும் பசியால் மிகவும் துடித்துப்போனார் ஜூலியானா

இதனால் வேறுவழியில்லாமல் கண்ணில் தென்படும் தவளைகளை பிடித்து உண்பது என்றமுடிவுக்கு வருகிறார் ஆனால் அவர்மிகவும் பலவீனமாக இருந்தமையால் அவரால் தவளைகளைப்பிடிக்கமுடியவில்லை பின்னர்தான் அவை விஷமுள்ள தவளைகள் என்றவிடயம் தெரியவருகின்றது

அப்போதுதான் ஒரு நீரோடையை கண்டுபிடிக்கின்றார் ஜூலியானவின் தந்தை காட்டில் தொலைந்துபோனால் நீரோடையைக்கண்டுபிடித்து  அது ஓடும்திசையில் அதோடுசென்றால் காட்டில் இருந்து தப்பிப்பதற்கான வழிகிடைக்கும் என அவரது சிறியவயதில் கூறியது அவருக்கு நினைவுக்கு வந்தது

நீரோடைகள் பல இணைந்தே ஆறாக ஓடுகின்றன எனவே இலகுவாக காட்டில் இருந்து வெளியே சென்றுவிடமுடியும் எனவே இந்த ஐடியாவை ஜூலியானா பின்பற்ற ஆரம்பித்தார்

ஆரம்பத்தில் சில நாட்கள் காத்திருந்து உயிர்தப்பியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் இணைந்து உயிர்தப்புவது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் ஆனால் அது ஆபத்து என உணர்ந்துகொண்டதால் ஜூலியானா முடிவெடுத்திருந்தார் ஆனால் வெளியே சென்றுகொண்டிருக்கும்போது தனது சூக்களில் ஒன்றை ஜூலியானா தொலைத்திருந்தார் இதனால் தாரையில் இருக்கும் பாம்புகள் தொடர்பான பயம் அவருக்கு அதிகரித்தது அதோடு அவரது கண்ணாடியும் தொலைந்துவிட்டது இதனால் பார்வையிலும் தெளிவு இருக்கவில்லை அதோடு அவரது கடிகாரமும் நின்றுவிட்டது இதனால் காலில் இருக்கும் ஒரு சூவின் உதவியுடன் பாஅம்பு இருக்கின்றதா என தரையை தடவிதடவிதடவி சோதனைசெய்துகொண்டே நடந்தார் ஜூலியானா

நீரோடை ஆறாகமாறியது ஆனால் ஆற்றின் குறுக்காக பெரிய மரம் ஒன்றுமுறிந்துவீழ்ந்திருந்தது இதனால் பாதை தடைப்பட்டது ஆரம்பத்தில் நம்பிக்கையிழந்தாலும் மீண்டும் முயற்சிசெய்து மரத்தைக்கடந்து முன்னேற ஆரம்பித்தார் ஜூலியானா சிறிது தூரம் சென்றதும் அவரது கண்முன்னால் ஒரு படகு தெரிந்தது ஆரம்பத்தில் இது கற்பனை என எண்ணினாலும் அருகில் சென்று தொட்டுப்பார்த்ததும் அது உண்மை என ஜூலியானாவிற்கு புரிந்துவிட்டது


சந்தோஷத்தில் ஜூலியானாவிற்கு தலைகால்புரியவில்லை உடனடியாக போர்ட்டில் ஏறினார் போட் நீரோட்டத்தில் தானாக செல்ல ஆரம்பித்தது ஜூலியானாவால் துடுப்பை இயக்கமுடியவில்லை காரணம் அவரது கையில் இருந்த புழுப்பிடித்த காயம் அதோடு புழுக்கள் இன்னும் சற்று ஆழத்துக்கு சென்றிருந்த்ன.அப்போதுதான் போர்ட்டில்  இருந்த எண்ணைக்கான் அவரது கண்களுக்கு தெரியவருகின்றது சிறியவயதில் நாயின் காலில் இருந்த புழுப்பிடித்த காயத்திற்கு ஜூலியானவின் தந்தை எண்ணை ஊற்ரியது நினைவுக்குவர அதையே ஜூலியானாவும் செய்தார் மிகுந்த எரிச்சல் வலி ஏற்பட்டாலும் அது வேலைசெய்தது 30 புழுக்களை அவரால் வெளியே பிடுங்கி எடுக்கமுடிந்தது ஆனால் படகு மீண்டும் காட்டிற்குள்தான் சென்றுகொண்டிருந்தது

மீண்டும் மயங்கிய ஜூலியானா கண்விழிக்கும்போது தரையௌயும் அதில் கட்டப்பட்டிருந்த சிறியகுடிசையையும் காண்கின்றார் அவரால் படகில் இருந்து கீழிறங்க முடியவில்லை நீண்டமுயற்சிக்குப்பின் ஜூலியானா தரையிறங்கி குடிசையை நோக்கி ஓடுகின்றார் அங்கே 2 பழங்குடி இனத்தவர்கள் இவரைக்கண்டவுடன் மிரண்டுவிடுகின்றார்கள் இரத்தச்சிவப்பில் கண்கள் உடல்முழுவதும் இரத்தத்துடன் தங்கமுடியைக்கொண்ட பெண் இதே உருவத்தில் அவர்கள் வழிபடும் பேய் தெய்வமொன்று ஆற்றில் வாழ்வதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள் ஒருவேளை அதுதானோ என அவர்கள் ஆரம்பத்தில் பயந்துவிட்டார்கள் 



விபரீதன்  நடப்பதற்கு முன்னர் ஜூலியானா தனக்குத்தெரிந்த ஸ்பானிஸ் மொழியில் நடந்தவிபத்திய அவர்களுக்கு கூறி உதவி கேட்க புரிந்துகொண்ட அவர்கள் அருகில் இருந்த நகரத்திற்கு  ஜூலியானாவை அழைத்துச்சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜூலியானா விபத்து நடந்த 11 வது நாளில்தான் இது  நடைபெற்றது

அந்த விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே ஒரு நபர் இவர்தான் என்ற விடயம் பின்னர்தான் ஜூலியானாவிற்கு தெரியவருகின்றது திரைப்பட இயக்குனர் வேர்னர் ஹேர்சொக் இந்தவிமானத்தில் செல்வதற்கு டிக்கட்டை பதிவுசெய்து இறுதினேரத்தில் கான்சல் செய்திருந்தார் அவர் இந்த விடயத்தை அறிந்ததும் இந்த சம்பவத்தை வைத்து wings of hope என்ற திரைப்படதை இயக்கி வெளியிட்டிருக்கிறார் அவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்